சுங்கச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம் : கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட 6 பேரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-30 23:13 GMT
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட 6 பேரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கப்பலூர் சுங்க சாவடியில், காரில் சென்ற ஒரு கும்பல், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தகராறில் ஈடுபட்டு, ஊழியர்களை மிரட்டும் வகையில் வானத்தை நோக்கி  துப்பாக்கியால் சுட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக சசிக்குமார், அவருக்கு உதவியாக இருந்த கார்த்திகேயன், தனசேகர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்