திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளை : பயணிக்கு அடி- உதை

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் மதுபோதையில் வந்து, போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.

Update: 2019-08-29 19:08 GMT
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் மதுபோதையில் வந்து, போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தில் பயணி விஜய் என்பவருக்கு அடி- உதை விழுந்தது.


தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, பயணி விஜய்- ஐ மீட்டனர். திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு அரசு பேருந்தில் செல்ல வந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. பயணி விஜய், மதுபோதையில் இருப்பதை  திண்டுக்கல் போலீசார் உறுதி செய்தனர். இரு தரப்பிலும் போலீசில் புகார் கொடுத்துள்ளதால், தற்போது விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்