மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற வெளிமாநிலத்தவர் - 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநிலத்தவர் 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-19 18:52 GMT
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளிமாநிலத்தவர் 126 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. எதன் அடிப்படையில்  கலந்தாய்வில் கலந்துகொண்டனர் என்பது குறித்தும்  அவர்களின் இருப்பிட சான்று குறித்தும்  பதிலளிக்கவும் 
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையை சேர்ந்த சோம்நாத்,  நேயா,  ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இவ்வழக்கை ஆகஸ்ட் 26 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்