முதலமைச்சர் நல் ஆளுமை விருதுகள் : அமைச்சர்கள் வேலுமணி, கே.சி. வீரமணிக்கு வழங்கப்பட்டது

சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு முதலமைச்சர் நல்ஆளுமை விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Update: 2019-08-15 07:30 GMT
சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு முதலமைச்சர் நல்ஆளுமை விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னையில் குற்றங்களை கண்டுபிடிக்க சிசிடிவி கேமரா பொருத்தியது மற்றும் பேஸ் டிடெக்டர் செயலியை வெளியிட்டதற்காக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கும், வேலூர் மாவட்டம் நாகநதி சீரமைப்பு திட்ட பணிகளுக்காக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கும், ஜி.எஸ்.டி குறித்த சந்தேகங்களுக்கு 24 மணிநேர ஆலோசனை வழங்கும் சேவைக்காக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்