திருவிடைமருதூரில் புதிய நீதிமன்றம் திறப்பு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில், புதிய நீதிமன்றத்தை மாவட்ட தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.

Update: 2019-08-15 02:30 GMT
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில், புதிய நீதிமன்றத்தை மாவட்ட தலைமை நீதிபதி திறந்து வைத்தார். பேரூராட்சியான அங்கு, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை நீதிபதி சிவஞானம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், நீதிபதி சிவஞானம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி, நீதிமன்றத்தை திறந்து வைத்தனர். ஏராளமானோர் பங்கேற்ற திறப்பு விழாவில், முதன் முறையாக வழக்கு விசாரணையும் நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்