"கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-08-07 10:04 GMT
வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த, வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், இந்த தகவலை வெளியிட்டார். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்