எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஆண்டு விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

வேளாண் உற்பத்தியில் தமிழகம், தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

Update: 2019-08-07 06:59 GMT
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 30 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், 3 நாட்கள் நடைபெறும் அறிவியல் கருத்தரங்கை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், எம்.எஸ்.சுவாமிநாதனின் சாதனைகளை பாராட்டினார். வேளாண் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக தெரிவித்த முதலமைச்சர், நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்