சவுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சவூதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா போலீசார், உத்தரபிரதேச வாலிபரை கைது செய்துள்ளனர்.

Update: 2019-08-07 02:33 GMT
சவூதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா போலீசார்,  உத்தரபிரதேச வாலிபரை கைது செய்துள்ளனர். சவூதி அரேபியா ரியாத்தில் இருந்து மஸ்கட் வழியாக வந்த விமானத்தை சோதனையிட்டபோது, மும்ஷில் உசேன் என்பவர் சிக்கினார். அவரது உடைமைகளை சோதனையிட்டபோது,  டார்ச் லைட் ஒன்றில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்த‌து தெரிய வந்த‌து.  இதையடுத்து ரூ. 70 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 865 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மும்ஷில் உசேனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்