பொன்னேரி சுடுகாட்டில் வடமாநில தொழிலாளி உடலை எரியூட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

பொன்னேரி சுடுகாட்டில் வடமாநில தொழிலாளியை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-31 03:47 GMT
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுடுகாட்டில் வடமாநில தொழிலாளியை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிபூண்டி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து இறந்த வடமாநில தொழிலாளி ராய் புலியூலி என்பவரை அடக்கம் செய்ய அமரர் ஊர்தியில் சில வடமாநில தொழிலாளர்கள் சுடுகாட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு திரண்ட சிலர் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சமரசம் செய்ய சென்ற போலீசாருடன் அவர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு தொழிலாளியின் உடல் எரியூட்டப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்