சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குதலை கண்டித்து காங்கிரசார் உண்ணாவிரதம்...

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும், மத்திய அரசின் முடிவை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-29 11:44 GMT
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும், மத்திய அரசின் முடிவை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தாராளமயமாக்கல் கொள்கையை மோடி தலைமையிலான மத்திய அரசு தவறாக புரிந்து கொண்டுள்ளதாக விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்