கடவுள் நம்பிக்கையே மனிதனை மேம்படுத்தும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கலந்து கொண்டார்.

Update: 2019-07-27 07:10 GMT
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கலந்து கொண்டார். வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அத்திவரதரை தரிசனம் செய்த அவருக்கு, சிறப்பு அர்ச்சனைகள் முடிந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, கடவுள் நம்பிக்கை மட்டுமே மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்