ஆலயத்தின் பூட்டை உடைத்து உண்டியலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்

திருச்சி திருவெறும்பூர் அடுத்த காவலர் குடியிருப்பு பகுதியில் ஞான விநாயகர் ஆலயத்தின் பூட்டை உடைத்து, உண்டியல் கொள்ளை அடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-07-25 10:38 GMT
திருச்சி திருவெறும்பூர் அடுத்த காவலர் குடியிருப்பு பகுதியில் ஞான விநாயகர் ஆலயத்தின் பூட்டை உடைத்து, உண்டியல் கொள்ளை அடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அடுத்த காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ ஞான விநாயகர் ஆலயத்தில், நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள், கடப்பாறையால் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். சிசிடிவியில் பதிவாகி இருந்த இந்த காட்சியின் அடிப்படையில், போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்