இன்று பரோலில் வருகிறார் நளினி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் உள்ள நளினி இன்று ஒரு மாத கால பரோலில் வெளியே வருகிறார்.

Update: 2019-07-24 20:03 GMT
ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக வேலூர்  பெண்கள் மத்திய சிறையில் உள்ள நளினி இன்று ஒரு மாத கால பரோலில் வெளியே வருகிறார். மகள் திருமண ஏற்பாட்டிற்காக சென்னை உயர்நீதிமன்றம் நளினிக்கு பரோல் வழங்கியுள்ளது. சிறையிலிருந்து இன்று  காலை வெளியே வரும் நளினி  வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்