தனியார் வேலைவாய்ப்பு : "80% தமிழர்களுக்கே வழங்க சட்டம்" - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-07-24 09:32 GMT
தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில், 75 சதவீதம் அம்மாநிலத்தவர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்பட புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும், இது தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு வேலைக்கு செல்பவர்களை பாதிக்கக்கூடும் என்றாலும், ஆந்திர மக்களின் நலனுக்காக அம்மாநில அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது என்றும் ராமதாஸ் தெரிவித்தார். எனவே, தமிழகமும் ஆந்திராவை பின்பற்றி சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்