ராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்
சென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
சென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான பொதுமக்கள், ராஜகோபால் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், மாலை 3 மணி அளவில், ராஜகோபாலின் உடல், அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.