ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி

கேரள அரசின் ஒப்புதலை பெற்ற பிறகு, ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Update: 2019-07-17 11:43 GMT
கேரள அரசின் ஒப்புதலை பெற்ற பிறகு, ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். பேரவையில் நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய துணை சபாநாயகர், ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை 3 இடங்களில் தடுப்பணை கட்டி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, தடுப்பணை கட்டுவது குறித்த கருத்துக்களுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கேரள அரசோடு பேசி ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்