16 வது நாள் அத்தி வரதர் உற்சவம் : இளஞ்சிவப்பு பட்டாடை அலங்காரத்தில் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-07-16 04:39 GMT
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  நிறப் பட்டு ஆடையில், பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார். இதன்படி 16 ஆம் நாளான இன்று, அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டது. ஏலக்காய், தாமரை பூ மற்றும் செண்பகப்பூ மாலை அணிந்து அருள்பாலித்து வரும், அத்திவரதரை தரிசனம் செய்ய அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கடந்த 15 நாட்களில் 17 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்