பெருங்களத்தூர் - சிங்கப்பெருமாள் கோயில் வரை 8 வழிச்சாலை : சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை பெருங்களத்தூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பன்னடுக்கு மேம்பாலம் விரைவில் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Update: 2019-07-15 11:23 GMT
சென்னை பெருங்களத்தூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பன்னடுக்கு மேம்பாலம் விரைவில் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  சட்டப்பேரவையில் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளச்சேரி, கீழ்க்கட்டளை, வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்றார். மேலும் பெருங்களத்துாரில் இருந்து, சிங்கப்பெருமாள் கோவில் வரை தற்போதுள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்