விமான பயணியிடம் சோதனை - தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் மஸ்கட்டை சேர்ந்த பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் சாட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-07-14 08:25 GMT
சென்னை விமான நிலையத்தில் மஸ்கட்டை சேர்ந்த பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் சாட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. ஏமன் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் உசேன் அலி என்பவர் தனது தந்தை, தாய் ஆகியோருடன் பெங்களூரு செல்ல உள்நாட்டு முனையத்திற்கு வந்தார். அவரது உடமைகளை மத்திய தொழிற்படை போலீசார் சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதனை போலீசார்  பறிமுதல் செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்