ஊதிய உயர்வு - வேட்டை தடுப்பு காவலர்கள் நன்றி

ஊதியத்தை உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு வனத்துறை வேட்டை தடுப்பு காவலலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Update: 2019-07-13 10:15 GMT
ஊதியத்தை உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு வனத்துறை வேட்டை தடுப்பு காவலலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக அடிப்படையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் வன தடுப்பு காவலர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான ஊதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேட்டை தடுப்பு காவலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்