குடிபோதையில் இருந்தவரை கண்டித்ததால் ஆத்திரம் :போலீசை ஆக்ரோஷமாக அரிவாளால் வெட்டிய நபர்

திருச்சியில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்ட போலீசை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-07-12 10:17 GMT
திருச்சியில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்ட போலீசை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மதுபோதையில் அங்குள்ள கடைகளுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக ரோந்து பணியில் இருந்த காவலர் ஹரிஹரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஹரிஹரன் போதையில் இருந்த இஸ்மாயிலை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இஸ்மாயில் அரிவாளால் காவலரை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரன் ரத்தம் கொட்டிய நிலையில் வந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் இஸ்மாயிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்