"மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன" - அமைச்சர் ஜெயக்குமார்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தடுக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் இறப்பு சம்பவங்கள் நடப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2019-07-10 09:16 GMT
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தடுக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் இறப்பு சம்பவங்கள் நடப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை சைதாப்பேட்டை மீன் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மனித கழிவுகளை அள்ளும் இயந்திரங்கள் வாங்க தமிழக அரசுக்கு பணம் இல்லையா?, மனம் இல்லையா? என்ற ப.சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக , மனித கழிவுகளை அகற்ற  இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும், வெறும் புள்ளி விவரத்தை வைத்து பேசுவது தவறானது என்றும் விமர்சனம் செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்