வாகனத்தை வழிமறித்து தாக்கிய காட்டு யானை - யானையை விரட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தொரப்பள்ளியில் சாலையில் வந்து கொண்டிருந்த வாகனத்தை காட்டு யானை துரத்தி தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-07-07 20:28 GMT
நீலகிரி மாவட்டம், தொரப்பள்ளியில் சாலையில் வந்து கொண்டிருந்த வாகனத்தை, காட்டு யானை துரத்தி தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர். இதில், பால் வண்டியில் பயணித்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காட்டு யானையின் தாக்குதலால் அச்சமடைந்த பொதுமக்கள்,யானையை வனத்திற்குள் விரட்டக்கோரி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்