தருமபுரியில் சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

தருமபுரியில் சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-30 10:51 GMT
தருமபுரியில் சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் அபி. 9 மாத கர்ப்பிணியான இவர், வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஊசி செலுத்திய போது வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால் ஆக்ஜிசன் குறைவாக இருப்பதாக கூறி அப்பெண்ணை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.  இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்