அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பதிவாளர் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தின், புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி பதவியேற்றார்.

Update: 2019-06-27 11:56 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தின், புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி பதவியேற்றார். அண்ணா பல்கலைக் கழக பதிவாளராக இருந்து வந்த பேராசிரியர் குமார் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தியை நியமனம் செய்து, துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டார். இன்று காலை பதிவாளர் பதவியை கருணாமூர்த்தி ஏற்றுக்கொண்டார். கருணாமூர்த்தி, கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்