ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பொதுமக்கள் சாலை மறியல்

வெள்ளகோயில் பகுதிகளில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-24 02:58 GMT
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் பகுதிகளில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து  2 தண்ணீர் லாரிகள், ஒரு டிராக்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதைக் கண்டித்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஒரு மாதமாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீர் விநியோகமும் ஒரு மாதமாக நடைபெறவில்லை என்று கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். தகவலறிந்து முன்கூட்டியே வந்து காத்திருந்த போலீசார் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்