திறந்த வெளி கிணறு அமைக்கும் பணி - நகராட்சி அதிகாரிகள் ஆய்வு...
ரூ. 25 லட்சம் செலவில் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
நெல்லை கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக பெரியாற்று படுகையில் 25 லட்சம் செலவில் புதிதாக திறந்த வெளி கிணறு அமைக்கபட்டு, பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இந்த பணிகள் குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனைத்து நீரேற்று நிலையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொது மக்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.