பழங்குடியினருக்கு இலவச யோகா பயிற்சி - ஆசிரியரின் சேவைக்கு குவியும் பாராட்டுகள்
பழங்குடியின மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளித்து வரும் ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளித்து வரும் ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குன்னுார் அருகே, கடசோலையை சேர்ந்த சுமதி, 2017 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இதுவரை 20 பழங்குடி கிராமங்களை சேர்ந்த 800 பழங்குடியின பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்துள்ளார். ஆசிரியரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.