திண்டுக்கல் : பள்ளி வாகனம் மோதி குழந்தை பலி

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள சரவணம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் அம்பிளிக்கை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

Update: 2019-06-20 20:18 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள சரவணம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், அம்பிளிக்கை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.  நேற்று காலை சுரேஷின் சகோதரி தனது மகனை பள்ளி வாகனத்தில் ஏற்றி விடுவதற்காக செல்லும் போது, சுரேஷ் மகன் ஆதிஷையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ஆதிஷ்  பள்ளி வாகனத்தின் முன்புறம் ஓடியுள்ளான். அதேநேரம் வாகனத்தை ஓட்டுனர் இயக்க போது, குழந்தையின் மீது பள்ளி வாகனம் மோதியதில் ஆதிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரனூர் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுனர் பிரபுவை  கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்