மதுபோதையில் பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-06-18 23:26 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிப்பிப்பாறையை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஏழாயிரம்பண்ணையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் மதுபோதையில் குட்கா கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திய சார்பு  ஆய்வாளரிடமும் அவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக பெட்டிக்கடைக்காரரின் புகாரையடுத்து ராணுவ வீரர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்