திருப்பதியில் ஜீப் மோதி சென்னை சிறுவன் பலி...
திருப்பதி அருகே ஜீப் மோதியதில் சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான்.
திருப்பதி அருகே, ஜீப் மோதியதில், சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தான். கோயம்பேட்டைச் சேர்ந்த பாபு - இந்துமதி தம்பதியர், தங்களது மகன்களான கல்கி, லோகேஷ் மற்றும் குடும்பத்தினருடன், திருப்பதிக்கு வந்தனர். பாபு குடும்பத்தினர், திருமலையில், ஓய்வறைக்கு சென்று கொண்டிருந்த போது, ஜீப் ஒன்று, மோதியது. ஜீப் ஒட்டுநருக்கு, திடீரென வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மோதியதில், லோகேஷ் படுகாயமடைந்தான். பின்னர், மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, லோகேஷ் உயிரிழந்தான். இதுகுறித்து, திருமலை போக்குவரத்து போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.