ரயிலில் சிரமப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கு : ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிப்பு

ரயிலில் சென்ற போது சிரமப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம், ரயில் நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Update: 2019-06-11 19:48 GMT
ரயிலில் சென்ற போது சிரமப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் நீதிமன்றம், ரயில் நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லை சென்ற ரயிலில் பயணித்த இக்பால் என்பவர், மேல்படுக்கைக்கு செல்ல ஏணி வசதி இல்லாமல் தான் சிரமபட்டதாகவும், எலி தொந்தரவு காரணமாக இரவு முழுவதும் தூங்கவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். ரயிலில் எலி தொந்தரவு இருந்தது உண்மை என்றும், அதனால் பெட்டி சுத்தம் செய்யும் ஒப்பந்தகாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் 
நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்