"தமிழ்மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருப்பார்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இரங்கல்

நகைச்சுவை நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் உயிரிழந்த செய்தி நம்பமுடியாத பேரதிர்ச்சியாக உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-10 19:20 GMT
நகைச்சுவை நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் உயிரிழந்த செய்தி நம்பமுடியாத பேரதிர்ச்சியாக உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், எதார்த்தமான நகைச்சுவைகளால் என்றும் தமிழ்மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கும் கிரேஸி மோகனின் இழப்பு, தமிழ் நாடக உலகத்திற்கும், தமிழ்த் திரைப்பட உலகிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கே ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்