ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய மர்ம கும்பல்

திருத்தணி அருகே ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய மர்ம கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-08 19:47 GMT
திருத்தணி அருகே ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய மர்ம கும்பலை போலீசார் கைது செய்தனர். திருத்தணி மேட்டுதெருவில் வசித்த   வடிவேல் என்பவர் மீது திருத்தணி காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகள் உள்ளன.  இந்நிலையில், திருத்தணி ரயில் நிலையத்தில் வடிவேல்  தூங்கிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 3 பேர்,  அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த  போலீசார், சரவணன், சஞ்சய், பரத் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்