எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்ததை மக்கள் உணர்ந்துள்ளனர் - கே.சி.வீரமணி
எதிர்க்கட்சிகளின் கவர்ச்சிகரமான பொய்ப்பிரசாரம் மக்களிடையே எடுபட்டுவிட்டதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கவர்ச்சிகரமான பொய்ப்பிரசாரம் மக்களிடையே எடுபட்டுவிட்டதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். மோடியின் வெற்றிக்கு பிறகு பொய்யான கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து விட்டதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளதாகவும் அப்போது அவர் கூறினார்.