மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் சாதனை : அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குவியும் பாராட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 15க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளனர்

Update: 2019-06-04 05:38 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் 15க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளனர். திருப்பூரில்  மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடத்தப்பட்டது. நெடுங்கம்பு வீச்சு, அலங்காரச் சுற்று, நேரடிச் சண்டை, வாள் மற்றும் வேல்கம்பு வீச்சு ஆகிய 5 பிரிவுகளில், உடல் எடை மற்றும் வயது அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. இதில், மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை, மேலவாசல், மோகூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் 15 பேர் பங்கேற்றனர். மொத்தம் 14 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை குவித்து, திரும்பிய அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதனிடையே, பயிற்சியில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுழற்றும் வேகமும் துல்லியமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்