மதுரை : "கொத்தடிமையாக உள்ள கணவரை மீட்டுத்தர வேண்டும்" - பெண் தர்ணா போராட்டம்

வடமாநிலத்தில் கொத்தடிமையாக உள்ள தமது கணவரை மீட்டுத் தர கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2019-06-03 14:28 GMT
வடமாநிலத்தில் கொத்தடிமையாக உள்ள தமது கணவரை மீட்டுத் தர கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  பேரையூரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தமது கணவர் பாண்டியராஜ் முறுக்கு கம்பெனியில், கொத்தடிமையாக உள்ளதாக புகார் கூறியுள்ளார். உசிலம்பட்டியை சேர்ந்த ராமத்தேவரிடம், இருவரும் வேலை செய்ததாகவும், அங்கு தம்மையும், தமது குழந்தையையும் கொடுமைப் படுத்தியதாகவும் மாரியம்மாள் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, கணவர் பாண்டியராஜை, மீட்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, மாரியம்மாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்