மது குடிக்க பணம் தராததால், மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்...

மனைவியை கணவனே தீ வைத்து கொலை செய்த சம்பவத்துக்கு, மது குடிக்க பணம் தராததால் ஏற்பட்ட ஆத்திரமே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2019-05-28 09:55 GMT
வள்ளுவக்குடியை சேர்ந்த கொத்தனார் செந்தில், அவரின் மனைவி கவுசல்யா. இளம் தம்பதிகளான அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையில், அவ்வப்போது பிரச்சினையை ஏற்படுத்தியது கணவர் செந்திலின் மது பழக்கம். இளம் மனைவியை உயிரோடு தீ வைத்து கொளுத்தும் அளவுக்கு, அன்பான கணவனுக்கு கோபம் ஏற்பட மது காரணம் என்பது பெரும் சோகம். வேலை முடித்து வீடு திரும்பும் கொத்தனார் கணவன் செந்தில், அவ்வப்போது மது அருந்தி வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கத்தால், அதற்கு அடிமையாகிப் போன கணவன் செந்தில் வேலைக்கு செல்வதும் குறைந்துள்ளது. கொஞ்சம் விட்டுப்பிடித்த மனைவி கவுசல்யா, சம்பவத்தன்று மது குடிக்க பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த செந்தில், மண்ணெண்ணெயை ஊற்றி கொளுத்திவிடுதாக கூறி மிரட்டியுள்ளார். இதை பெரிதாக மனைவி எடுத்துக்கொள்ளதாக நிலையில், மனைவி மீது மண்ணென்ணெய்யை ஊற்றியுள்ளார். மனைவி சுதாரிப்பதற்குள், மது கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த கணவன் செந்தில், மனைவியின் உடலுக்கு உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளார். தீக்காயங்களுடன் 3 நாட்களாக உயிருக்கு போராடிய கவுசல்யா, கடைசி நிமிடத்தில் அளித்த வாக்கு மூலத்தில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சீர்காழி போலீசார், செந்திலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மது, வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்பதை சீர்காழி அருகே நடந்த இந்த சம்பவம் வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்