சென்னை விமான நிலையம் : ரூ. 50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில், மலேசியா மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 50 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-28 03:03 GMT
சென்னை விமான நிலையத்தில், பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில், மலேசியா மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 50 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக வந்த ஒரு விமானத்தில், 41 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை பயணி ஒருவர் பதுக்கி எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதே போல மலேசியாவில் இருந்த வந்த மற்றொரு விமானத்தில் சென்னையை சேர்ந்த அப்துல் பக்கீர் என்பவர், உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த 9 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்