சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த தேயிலை பூங்கா

ஊட்டியில் அமைந்துள்ள தேயிலை பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Update: 2019-05-25 19:38 GMT
ஊட்டியில் அமைந்துள்ள தேயிலை பூங்கா சுற்றுலா பயணிகளை  வெகுவாக கவர்ந்துள்ளது.  ஊட்டி தொட்டபெட்டா தேயிலை பூங்கா இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ளது. நாலாபுறமும் சோலை காடுகள் நடுவே  இந்த பூங்கா அமைந்துள்ளது. இங்கு பூந்தோட்டம், குழந்தைகள் விளையாட உபகரணங்கள் உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து விளையாடி மகிழ்கின்றனர். தேயிலை தோட்டங்களில் தலையில் கூடை கட்டி பசுந்தேயிலை பறித்து புகைப்படம் மற்றும்  செல்ஃபி எடுத்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.   இங்குள்ள காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஜில்லேன்ற காற்றை அனுபவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்