கோடையின் தாக்கத்தால் வறண்டு போன பாபநாசம் அணை

நெல்லை மாவட்டத்தின் குடிநீர் உள்ளிட்ட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும், பாபநாசம் அணை கோடையின் தாக்கத்தால் வறண்டு போனதால் குட்டை போல் காட்சி அளிக்கிறது.

Update: 2019-05-25 11:47 GMT
நெல்லை மாவட்டத்தின் குடிநீர் உள்ளிட்ட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும், பாபநாசம் அணை கோடையின் தாக்கத்தால் வறண்டு போனதால் குட்டை போல் காட்சி அளிக்கிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் தற்போது 9 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதேபோல் 4 மாவட்ட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் சேர்வலாறு அணையில் 47 அடி மட்டுமே தண்ணீர் உள்ளதால், நெல்லை மாவட்டத்தில் கடும் குடநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்