ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு : கொல்லிமலை சோதனைசாவடிக்கு சிபிசிஐடி கடிதம்

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடையவர்களின் வாகனம் எத்தனை முறை வந்து சென்றது என்பது குறித்த விவரங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Update: 2019-05-22 12:26 GMT
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடையவர்களின் வாகனம் எத்தனை முறை வந்து சென்றது என்பது குறித்த விவரங்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்து வருகின்றனர். 

இது தொடர்பாக கொல்லிமலை வனத்துறை சோதனைசாவடிக்கு, சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். அதில், கடந்த நான்கு ஆண்டுகளில், அமுதவள்ளி, அவரின் கணவர் ரவிச்சந்திரன் உள்பட கைதான 10 பேரின் வாகனங்கள் எத்தனை முறை கொல்லிமலைக்கு வந்து சென்றது என்பது குறித்த விவரங்களை கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தவுடன், அதன் அடிப்படையில் விசாரணை வளையத்தை விரிவுப்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 260 குழந்தைகளின் நிலை என்ன என்பது குறித்த விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்