விஷம் அருந்தி காதல் ஜோடி தற்கொலை

மதுரை கேகே நகர் வண்டியூர் பூங்காவில் இறந்த நிலையில் ஆண் பெண் இருவர் உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

Update: 2019-05-22 03:48 GMT
மதுரை கேகே நகர் வண்டியூர் பூங்காவில் இறந்த நிலையில் ஆண் பெண் இருவர் உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்,  இறந்தவர்கள் இருவரும் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், திருமணம் செய்து கொள்ள இருந்ததும் தெரியவந்தது.
Tags:    

மேலும் செய்திகள்