நாகர்கோவிலில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலாளி

நாகர்கோவிலில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 11 வயது சிறுமிக்கு மருத்துவமனை காவலாளி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-21 12:31 GMT
நாகர்கோவிலில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்,  11 வயது சிறுமிக்கு மருத்துவமனை காவலாளி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிஜு என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு பாதுகாப்பாக, 11 வயது சிறுமி மருத்துவமனையில் தங்கியுள்ளார். இந்தநிலையில், அந்த சிறுமிக்கு , காவலாளி சுபின் என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் உறவினர்கள் புகார் அளிக்க, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மற்றும் போலீசார் காவலாளி சுபினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்