வீடுபுகுந்து பேட்டரி திருடிய திருடன் : திருடனை கையும் களவுமாக பிடித்த மக்கள்

கோவையில் வீடுபுகுந்து பேட்டரி திருடிய திருடனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-05-20 22:30 GMT
கோவையில் வீடுபுகுந்து பேட்டரி திருடிய திருடனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரத்தினபுரி செக்கான் தோட்டம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் யுபிஎஸ் பேட்டரி ஒன்றை திருடிசென்றுள்ளான். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த மர்ம நபர், கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த  ஜானீர் உசேன் என்பது தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்