ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த 2 பேர் கைது

ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-05-17 18:14 GMT
ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். சித்தூரில் உள்ள சேஷாசலம் வனப்பகுதி அருகே செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பத்துக்கும் மேற்பட்டோர் செம்மரங்களை கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை பிடிக்க முயன்ற போது, மரங்களை விட்டு விட்டு தப்பி ஒடியுள்ளனர். இதில் விழுப்புரத்தை சேர்ந்த ஆண்டி மற்றும் தர்மன் ஆகியோரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். தொடர்ந்து, அவர்கள் விட்டுச் சென்ற 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 11 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்