திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு விவகாரம் : விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கணவரை காணவில்லை - ஆட்சியரிடம் மனைவி மனு

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்த அழைத்து செல்லப்பட்ட தனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Update: 2019-05-14 19:23 GMT
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்த அழைத்து செல்லப்பட்ட தனது கணவரை   காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும்,  அவரது மனைவி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம், முகமது பாரூக் என்பவரது மனைவி ரஜியா பேகம், தமது குழந்தைகளுடன் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தமது கணவரை, விசாரணைக்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அழைத்து சென்றதாகவும், ஆனால் அவர் இன்னும் வீடு திரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்