"அதிமுக ஆட்சியை அகற்ற தினகரன் சதி" - ராஜேந்திர பாலாஜி

அதிமுக ஆட்சியை அகற்ற தினகரன் சதி வேலையில் ஈடுபடுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.;

Update: 2019-05-09 13:15 GMT
அதிமுக ஆட்சியை அகற்ற தினகரன் சதி வேலையில் ஈடுபடுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக தருவைக்குளம் பகுதியில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது விசைபடகு ஒன்றில் கடலுக்குள் சென்று கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் ஆதரவு திரட்டினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியை அகற்றும் தினகரனின் திட்டம் தோல்வியில் தான் முடியும் என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்