தள்ளாடும் வயதில் பிச்சை எடுக்கும் முதியவர் : மகன்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியரிடம் மனு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அதம்பார் என்ற கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கோவிந்தராஜ், சில ஆண்டுகளுக்கு முன் தனது எட்டு ஏக்கர் நிலத்தை தனது மூன்று மகன்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.

Update: 2019-05-06 12:24 GMT
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அதம்பார் என்ற கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கோவிந்தராஜ், சில ஆண்டுகளுக்கு முன் தனது எட்டு ஏக்கர் நிலத்தை தனது மூன்று மகன்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சொத்துகளை பிரித்து கொடுத்த பின் தன்னை வீட்டை வீட்டு விரட்டிய மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோவிந்தராஜ் புகார் மனு அளித்துள்ளார். மூன்று ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்வதாகவும், உதவி கேட்டு சென்ற போது மகன்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் காவல்துறையிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்