தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது

தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்க உள்ளது.

Update: 2019-05-03 18:57 GMT
தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்க உள்ளது. இந்த நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் உள்ளிட்ட பகுதியில் நேற்று வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் முகத்தை மூடியபடி சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி அளவுக்கு சுட்டெரித்ததால், மக்கள் அவதியுற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்